இலங்கை

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் நடத்திய கொடூர தாக்குதல்

மன்னாரில் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான சூழ்நிலைக்கு மத்தயிலும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மேற்கொண்டு தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகருக்குள் பல பாரிய வாகனங்களில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் வன வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் கொண்டுவரப்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக 55 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்ட குழு, மாவட்ட மக்கள் கத்தோலிக்கு அருட்தந்தையர்கள் உள்ளடங்களாக பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் என பல நூற்றுக்கணக்கானவர்களின் பாதுகாப்புடன் பல வாகனங்களில் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னார் நகருக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியை மறித்து போராட்டங்களை மேற்கொண்டனர். இதன் போது பெண் பொலிஸார் இல்லாத நிலையில் ஆண் பொலிஸார் பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்