இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் கைது

பிரித்தானிய பெண்ணொருவர் சுமார் 46 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை கைதாகியுள்ளார்.

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய குஷ் ரக போதைப்பொருள் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில், குறித்த பெண்ணை சோதனையிட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ருடு 405 இல் குறித்த பெண் பிற்பகல் 3.45 அளவில் நாட்டிற்கு வந்ததாக சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 46 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, கடத்தப்பட்ட போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(Visited 29 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்