ஐரோப்பா

மலை உச்சியில் இருந்து பூனை தூக்கி எறிந்த பிரித்தானிய இளைஞன்!

பூனைக்குட்டி ஒன்றை மலை உச்சியில் இருந்து கீழே வீசிய பிரித்தானிய பதின்ம வயது இளைஞரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் Carnforth பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பதின்ம வயது இளைஞர் ஒருவர் கல்குவாரியின் மலை உச்சியில் இருந்து கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை கீழே தண்ணீரில் வீசிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விலங்கு மீது நடத்தப்பட்ட இத்தகைய கொடுமையை தொடர்ந்து லங்காஷயர் பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.சமூக ஊடக பயனர்களால் இந்த இளைஞரின் செயல் பொலிஸாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து லங்காஷயர் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Shocking moment cruel thug throws cat into quarry sending it plunging  hundreds of feet – as man, 18, arrested | The Sun

பொதுவாக நாட்டில் இத்தகைய விலங்கு கொடுமை செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது இணையத்தில் வெளியான வீடியோ காட்சிகளின் உண்மை தன்மை குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். அதே சமயம் விலங்கு கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையையும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விலங்கு துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.சமூக ஊடக பயனர் ஒருவர், விலங்கு கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு “நோய்” என கடுமையாக சாடியுள்ளார்.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்