ஐரோப்பா

குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகள் குறித்து பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

யூனிவர்சல் கிரெடிட்டில் உள்ள குடும்பங்கள் ஜூன் மாத இறுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பவுண்டுகளைப் அதிகமாக பெறலாம் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுனிவர்சல் கிரெடிட்டில் உள்ளவர்கள் ஜூன் 28 முதல் அதிகப்பட்ச குழந்தைப் பராமரிப்புக் கொடுப்பனவுகள் ஏறக்குறைய 50% அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுவதுடன், அரசாங்கம் அதிகமானவர்களை மீண்டும் வேலைக்குச் சேர்க்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இருந்து குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகளில் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் அதிகமாகக் கோர முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

இதன்படி  யுனிவர்சல் கிரெடிட் சிஸ்டம் மூலம் உதவி பெறத் தகுதியுள்ள பெற்றோர்கள் ஒரு குழந்தைக்கு £951 வரையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு £1,630 வரையும் திரும்பப் பெற முடியும். இது 47% அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆதரவிற்குத் தகுதியுடைய பெற்றோர்கள் வேலைக்குச் செல்லவோ அல்லது கடனில் சிக்கியோருக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக, இது அமைந்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content