பிரிட்டிஷ் முதலை நிபுணருக்கு 10 வருட சிறைத்தண்டனை

பல நாய்களை பலாத்காரம் செய்ததற்காகவும், சித்திரவதை செய்ததற்காகவும், கொன்றதற்காகவும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் முதலை நிபுணர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் டார்வினில் உள்ள விலங்கியல் நிபுணரான ஆடம் பிரிட்டன், கடந்த செப்டம்பரில் வடக்குப் பிரதேச (NT) உச்ச நீதிமன்றத்தில் மிருகவதை மற்றும் விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் தொடர்பான 56 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களை அணுகி விநியோகித்த நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ஊடக அறிக்கைகளின்படி, 52 வயதான ஆடம், தண்டனை வழங்குவதில் பல தாமதங்களை எதிர்கொண்டார், மேலும் விலங்குகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாங்கவோ வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.
(Visited 20 times, 1 visits today)