பிரித்தானியாவின் ஹீரோ – பலரின் உயிரை காப்பாற்றிய நபர்!
லண்டன் நோக்கி சென்ற ரயிலில் முன்னெடுக்கப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் பலரின் உயிரை காப்பாற்றிய நபர் பற்றி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் அந்த சமயத்தில் கதாநாயகன் போல செயற்பட்டு பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். தாக்குதலில் அவரும் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெயர் குறிப்பிடப்படாத ரயில் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரில் ஒருவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
ரயிலில் நடந்தவற்றின் சிசிடிவி காட்சிகளை பிரித்தானிய காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
அதில் குறித்த நபர் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அதனால் இன்று மற்றவர்கள் உயிரோடு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் வைத்தியசாலையில் அவசர பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என விவரித்துள்ள காவல்துறையினர் வரும் காலங்களில் ரயில்களில் அதிக பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
அத்துடன் ரயில் நிலையங்களில் சிசிடிவியை மேம்படுத்துவது உட்பட “விகிதாசார” முறையில் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும் காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.





