சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுடன் இணைந்த பிரேசில்

காசா பகுதியில் இஸ்ரேல் “இனப்படுகொலை” செய்வதாக தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கில் தற்போது பிரேசில் முறையாக இணைந்துள்ளது.
ஹேக் நீதிமன்றம் ஒரு அறிக்கையில், பிரேசில் சர்வதேச நீதிமன்ற சட்டத்தின் 63வது பிரிவைப் பயன்படுத்தி, இந்த வழக்கில் தலையீடு செய்வதற்கான அறிவிப்பை தாக்கல் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
முதல் முறையாக டிசம்பர் 29, 2023 அன்று, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் தொடர்பாக இனப்படுகொலை சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை மீறுவது தொடர்பாக நடவடிக்கைகளைத் தொடங்க தென்னாப்பிரிக்கா ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 2023 முதல் காசாவில் 65,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்ற இனப்படுகொலைப் போர் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிரான வழக்கில் சேர, தென்னாப்பிரிக்காவிற்கு ஆதரவாக தலையிட்ட ஸ்பெயின், அயர்லாந்து, மெக்சிகோ, துருக்கியே மற்றும் பிற நாடுகளுடன் தற்போது பிரேசில் இணைந்துள்ளது.