இலங்கை

இலங்கையில் ரயிலில் மோதுண்டு சிறுவன் பலி

ரம்புக்கன பகுதியில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ரம்புக்கன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத நிலையத்துக்கருகில் மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது.

நண்பர்களுடன் ரம்புக்கனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் பயணித்த சிறுவன், திஸ்ஸமல்பொல புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார்.

குறித்த சிறுவன் பயணிகள் இறங்க வேண்டிய புகையிரத மேடையில் இறங்காமல் மறுபக்கமாக இருந்து ரயில் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார்.

இதன்போது பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

14 வயதுடைய மெதமக பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பில் ரம்புக்கன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!