இலங்கை செய்தி

விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள தினேஷ் ஷாப்டரின் சடலம்

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிபுணர் குழு இரண்டாவது முறையாக இன்று (11) பேராதனை பல்கலைக்கழகத்தின் தடயவியல் பிரிவில் கூடியது.

இன்று (11 ஆம் திகதி), நாளை (12 ஆம் திகதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13 ஆம் திகதி) இந்த குழு தினேஷ் ஷாஃப்டரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகள் தொடர்பான தரவு பகுப்பாய்வு, திசு பரிசோதனை பகுப்பாய்வு மற்றும் ஸ்கேன் அறிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மேலும் ஆய்வு செய்யும்.

அவரது சடலம் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவில் ஆழ்துளை உறைவிப்பான் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடம், பேராசிரியர், தடயவியல் மருத்துவத் துறை, சட்ட வைத்தியர் யு.பி.பி. பெரேரா, மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் தலைவர் சட்ட வைத்தியர் ரொஹான் ருவன்புர ஆகியோர் விசாரணைக்கு தேவையான தரவுகளுடன் இன்று காலை பேராதனைக்கு புறப்பட்டனர்.

 

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!