செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல் – 5 பேர் மரணம்

அமெரிக்காவை அச்சுறுத்திய கடும் பனிப்புயலால் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Missouri, Kansas மாநிலங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் சில பகுதிகளில் 10 ஆண்டு காணாத அளவு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகின.

மத்திய, தென் மாநிலங்களில் பயணம் செய்வதற்கான சூழல் அபாயகரமாய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்துப் பள்ளிகளும் அரசாங்க அலுவலகங்களும் மூடப்பட்டன. சுமார் 300,000 பேரின் வீடுகளில் மின்சாரம் இல்லை. பல மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்துக்கு மாறாகத் தட்பநிலை ஏழு முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று வானிலை ஆய்வக அதிகாரிகள் கூறுகின்றனர்.

60 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

(Visited 37 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி