ஐரோப்பா

ஸ்பெயினில் வினோத திருட்டு – உணவகங்களில் மாயமான 1,100 நாற்காலிகள்

ஸ்பெயினில் உள்ள உணவகங்களில் இருந்து ஆயிர கணக்கான நாற்காலிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாற்காலிகளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் ஏழு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஆறு ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயற் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் நாட்டின் 18 வெவ்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்காக உணவகங்களுக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளை இந்தக் கும்பல் இலக்கு வைத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மொத்தம் 1,100க்கும் அதிகமான நாற்காலிகள் திருடப்பட்டதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 60,000 யூரோக்கள் என்றும் காவல்துறை மதிப்பிட்டுள்ளது. திருடப்பட்ட இந்த நாற்காலிகளைச் சந்தேக நபர்கள் பின்னர் விற்றுள்ளதாகவும் காவல்துறை மேலும் கூறியது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!