இந்தியா வருகை தரும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே

பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் உயர்மட்டப் பொறுப்பை ஏற்ற பிறகு பூடான் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
திங்கள்கிழமை டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)