ஆசிய கோப்பை வெற்றியாளர்களுக்கான பரிசு தொகையை அறிவித்த BCCI

2025ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்த வெற்றி மூலம் இந்திய அணிக்கு 9வது முறையாக ஆசிய கோப்பை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 21 கோடி பரிசு தொகை அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)