ஆசியா

தேசத்துரோக குற்றத்திற்காக 17 இஸ்கான் உறுப்பினர்களின் வங்கி கணக்குகளை முடக்கிய பங்களாதேஷ்

வங்​கதேசத்​தில் மேலும் 3 கோயில்கள் மீது வன்முறை கும்பல் தாக்​குதல் நடத்தியுள்ளது. இஸ்கான் அமைப்பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இஸ்கான் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்கசென்ற இன்னொரு பூசாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இது இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்​தில் பழைய இடஒதுக்​கீடு முறை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் பலர் உயிரிழந்தனர். பிரதமர் பதவியை ராஜினாமாசெய்த ஷேக் ஹசீனா, இந்தியா​வில் தஞ்சம் அடைந்​துள்ளார். தற்போது வங்கதேசத்​தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்​துள்ளது.

இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு, வங்கதேசத்தில் சிறு​பான்​மை​யினராக உள்ள இந்துக்கள் மற்றும் கோயில்கள் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் தாஸ் தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெற்று வந்தன.

இந்த சூழலில், போராட்டத்தை தடுக்கும் விதமாக, சின்​மோய் கிருஷ்ணதாஸை தேச துரோக வழக்​கில் வங்கதேச அரசு கைது செய்​தது. அவருக்கு ஜாமீனும் மறுக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், சட்டோகிராம் (சிட்​ட​காங்) பகுதி​யில் கடந்த 29ம் திகதி வெள்​ளிக்​கிழமை பிற்​பகலில் தொழுகை முடிந்த பிறகு, சந்தானேஷ்வரி மாத்ரி கோயில், சனீஸ்வரன் கோயில், காளி கோயில் ஆகிய 3 கோயில்கள் மீது ஒரு கும்பல் தாக்​குதல் நடத்​தி​யது. இதில், கோயில்கள் சேதம் அடைந்​தன.

திடீரென வந்த ஒரு கும்பல் கற்களை வீசி தாக்​குதல் நடத்​தி​யதாக கோயில் நிர்​வாகத்​தினர் கூறினர். கோயில்களுக்கு லேசான சேதம் மட்டுமே ஏற்பட்​டுள்ளதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவிக்​கின்​றனர். இதற்​கிடை​யே, சின்​மோய் கிருஷ்ண தாஸ் மற்றும் இஸ்கான் அமைப்​பினர் உட்பட 17 பேரின் வங்கிக் கணக்​குகளை 30 நாட்​களுக்கு வங்கதேச நிர்​வாகம் முடக்கி உள்ளது. இஸ்கான் அமைப்​புக்கு தடை விதிக்க அந்நாட்டு உச்ச நீதி​மன்றம் மறுத்த நிலை​யில், அவர்களது வங்கிக் கணக்​குகள் கடந்த 28ம் திகதி முடக்​கப்​பட்​டுள்ளன.

வங்கதேசத்தில் இந்துக்கள், இந்து கோயில்களை குறிவைத்து நடத்தப்படும் இத்தாக்குதல்களுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளது. இந்துக்கள், கோயில்​களின் பாது​காப்பை உறுதிப்​படுத்​துமாறு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மோய் கிருஷ்ண தாஸை சந்திக்க, பூசாரி ஷியாம் தாஸ் பிரபு நேற்று சென்றுள்ளார். அப்போது, அரசு வாரன்ட் எதுவும் இல்லாமல் அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இத்தகவலை இஸ்கான் துணை தலைவர் ராதாராம் தாஸ் நேற்று உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே, தேச துரோக வழக்கில் சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டிருப்பது வங்கதேச இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

(Visited 51 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்