ஆசியா

சிங்கப்பூரில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம் – விசாரணையில் வெளிவந்த தகவல்

சிங்கப்பூர் – புக்கிட் பாடோக்கில் உள்ள HDB வீட்டில் கடந்த 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிளாக் 179 புக்கிட் பாடோக் வெஸ்ட் அவென்யூ 8 இல் அந்த முதியவர் தனியாக வசித்து வந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

இந்நிலையில், முதியவரின் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வந்ததாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து அவர்கள் வந்துபார்த்தபோது முதியவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த முதியவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், இதனால் அவருக்கு கால்கள் வீங்கி, காயங்கள் இருக்கும் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக, அவர் ஒவ்வொரு இரவும் சூடான துண்டைப் பயன்படுத்தி தனது கால்களைத் தட்டுவார் என்றும், அந்த தட்டுதல் சத்தம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், 21ஆம் திகதி முதல் அக்கம்பக்கத்தினர் அந்த சத்தத்தை கேட்கவில்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததை சிங்கப்பூர்க் காவல் படை உறுதிப்படுத்தியது. அந்த முதியவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content