செய்தி விளையாட்டு

AUSvsENG – 2வது T20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னும், டிராவிஸ் ஹெட் 31 ரன்னும், மேத்யூ ஷாட் 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிலிப் சால்ட் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பொறுப்புடன் ஆடிய லிவிங்ஸ்டோன் அரை சதமடித்தார். அவர் 47 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தேல் 44 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் இங்கிலாந்து 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமனிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷாட் 5 விக்கெட்டும், சீன் அபாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 56 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!