ஆஸ்திரேலியா உலகம் ஐரோப்பா

கம்போடியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை

தாய்லாந்து மற்றும் கம்போடிய எல்லைப் பகுதிகளில் மோதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் தனது நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கம்போடியாவின் சீயெம் ரீப் (Siem Reap) உள்ளிட்ட பல மாகாணங்களுக்கான பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியாவின் ஸ்மார்ட் ட்ராவெல்லர் (Smart Traveller) இணையதளம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் நிலவும் இராணுவ மோதல்கள், வன்முறை மற்றும் வெடிக்காத கண்ணிவெடிகள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்கப் பலர் கம்போடியா செல்வதால், எல்லைப் பகுதிகளுக்குப் பயணிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

Puvan

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!