தனிஷ்க குணதிலக்கவுக்கு பொலிஸார் “நியாயமற்ற முறையில்” நடந்துகொண்டனர்!! அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/gunatilaka-jpg.webp)
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனிஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் “நியாயமற்ற முறையில்” நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, செலவுகள் தொடர்பான வழக்கு இன்று (24) நீதிபதி சாரா ஹகேட் முன்னிலையில் நடைபெற்றது.
அரசு தரப்பில் ஒப்படைக்கப்பட்ட வழக்கில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாக நீதிபதி சாரா ஹாகேட் கூறியுள்ளார்.
இதன் காரணமாக அவர் நீதிமன்ற கட்டணத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மொபைல் போன் செயலி மூலம் அடையாளம் காணப்பட்ட அவுஸ்திரேலிய பெண்ணுடன் அவரது வீட்டில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தனிஷ்கா மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் சிட்னி பொலிசார் அவரை கைது செய்தனர், விசாரணையின் பின்னர், கடந்த செப்டெம்பர் மாதம் குற்றச்சாட்டில் இருந்து தனிஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டார்.