தாக்குதல் தீவிரம் – காஸா சிட்டியை விட்டு வெளியேறிய 250,000 பேர்

தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் காஸா சிட்டியை விட்டு சுமார் 250,000 பேர் வேறு இடங்களுக்கு வெளியேறிவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காஸா சிட்டி மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து அவ்வாறு நடந்திருப்பதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
காஸா வட்டாரத்தின் மிகப்பெரிய நகரான காஸா சிட்டியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் சுமார் 1 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிடுகிறது.
காஸாவின் குடிமை பாதுகாப்பு பிரிவு தொடர் விமான தாக்குதல்களைப் பற்றி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மேற்குப் பகுதியைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.
(Visited 1 times, 1 visits today)