துருக்கியில் புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கி 8 பேர் பலி
துருக்கியின் வடமேற்கு மாகாணமான கனக்காலேயில் புலம்பெயர்ந்தோர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கனக்கலே ஆளுநர் இல்ஹாமி அக்டாஸ் அனடோலுவிடம் தெரிவித்தார்.
படகில் மொத்தம் எத்தனை புலம்பெயர்ந்தோர் இருந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று ஆளுநர் அனடோலுவிடம் கூறினார்.
(Visited 15 times, 1 visits today)





