“ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன” : ட்ரம்ப்பை எச்சரித்த ஈரான்!
அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா தலையிடும் என்ற டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கை “பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது” என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
ஈரானின் பொருளாதாரம் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்கா மீட்கும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சியின் (Abbas Araghchi) கருத்துக்கள் வந்துள்ளன.
தாக்குதல் நடந்தால் ஈரானின் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், “எங்கு குறிவைக்க வேண்டும் என்பதை சரியாக அறிந்திருப்பதாகவும்” அராச்சி சுட்டிக்காட்டினார்.
அத்துடன் எல்லையில் அமெரிக்க தேசிய காவல்படை நிறுத்தப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, பொது சொத்துக்கள் மீதான குற்றவியல் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஈரான் “அவர்களின் உள் விவகாரங்களில் எந்தவொரு தலையீட்டையும் வலுக்கட்டாயமாக நிராகரிக்கும்” என்று அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஈரானில் வாழ்க்கைச் சுமை அதிகரிப்பு மற்றும் மதிப்பிழந்த நாணய பெறுமதி உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒருவாரக் காலமாக ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





