இலங்கை செய்தி

பொலிஸாரை அவமரியாதையாக பேசிய அர்ச்சுனா – நீதவான் பிறப்பித்த உத்தரவு!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதுடன், பொலிஸாரை தவறான வார்த்தையால் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கினை விசாரணை செய்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அர்ச்சுனாவிடம் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.

இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அலட்சியமாக பேசியிருந்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நாடாளுமன்ற உறுப்பினர் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியதாக கூறி, கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு பி அறிக்கையை சமர்ப்பித்திருந்த நிலையில் நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை