இலங்கை செய்தி

பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு சுமார் 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது

டிட்வா புயலால் விளைநிலங்கள் சேதமடைந்த 67,460 நெல் விவசாயிகளுக்கு இழப்பீடாக 4,983 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக

விவசாகம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“71,110 ஹெக்டேர் பரப்பளவில் மொத்தம் 148,464 நெல் விவசாயிகள் பயிர் சேதத்திற்கான கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

இதில், கூடுதல் பயிர்களை பயிரிட்ட 10,801 விவசாயிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பணம் வழங்கப்பட்டது.

பேரிடரால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடாக 3,381.4 மில்லியன் ரூபா பணமாக வழங்கப்பட்டது.

“வரலாற்றில் முதன்முறையாக, ஒக்டோபர் முதல் ஜனவரி இறுதி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் அரிசி விலை உயர்வைத் தடுக்கும் வகையில் அரிசி மாஃபியா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.

அரிசியின் விலைகள் அதிகரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்றார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!