இலங்கை

ஆஸ்திரேலியாவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே நியமனம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே விரைவில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கோபால் பாக்லேவுக்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்