கொழும்பில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

தெஹிவளை பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தெஹிவளை கடவத்தை வீதி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீடொன்றுக்கு முன்னால் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த 45 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்கிச்சை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 45 times, 1 visits today)