ஆசியா செய்தி

TikTokஐ தடை செய்த மேலும் ஒரு நாடு

சமூக நல்லிணக்கத்திற்கான எதிர்மறையான முயற்சிகளை மேற்கோள் காட்டி, சீனாவிற்கு சொந்தமான வீடியோ பகிர்வு செயலியான TikTok க்கு தடை விதிப்பதாக நேபாள அரசாங்கம் அறிவித்தது,

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டிக்டோக்கை தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்..

எனினும், இந்த முடிவு எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளரான ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை என்றாலும், சமூகத்தின் பெரும் பகுதியினர் வெறுப்பூட்டும் பேச்சின் போக்கை ஊக்குவிப்பதற்காக TikTok ஐ விமர்சித்துள்ளனர் என்று அரசாங்கம் கூறியது.

கடந்த நான்கு ஆண்டுகளில், வீடியோ பகிர்வு செயலியில் 1,647 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளது.

நேபாள நாளிதழின் படி, நேபாள காவல்துறையின் சைபர் பீரோ, உள்துறை அமைச்சகம் மற்றும் டிக்டோக்கின் பிரதிநிதிகள் கடந்த வார தொடக்கத்தில் இந்த பிரச்சினையை விவாதித்ததாகவும், தொழில்நுட்ப தயாரிப்புகள் முடிந்ததைத் தொடர்ந்து தடை விதிப்பு முடிவு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி