ஐரோப்பா

உக்ரைனில் 482 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

உக்ரைனில் குறைந்தது 482 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக   அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் 1,461 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர், அவர்களில் 979 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“உக்ரைன் பிரதேசத்தின் ஒரு பகுதியைத் தற்காலிகமாக ஆக்கிரமித்ததன் காரணமாக காயமடைந்த குழந்தைகளின் சரியான எண்ணி்க்கையை நிறுவுவது சாத்தியமில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தற்போது 18 வயதுக்குட்பட்ட 401 பேர் காணவில்லை என்றும், 12,561 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனின் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!