செய்தி வட அமெரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படும் – டிரம்ப் அதிரடி

தென்னாப்பிரிக்காவுக்கு அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கும் அனைத்து நிதியுதவிகளையும் நிறுத்தப்போவதாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நில சீர்திருத்தக் கொள்கை தவறாகக் கடைப்பிடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட வகுப்பினரின் நிலத்தைப் பறித்து அவர்களை அரசு மோசமாக நடத்துவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்த விவசாயிகளை மீள்குடியேற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!