அல்-ஷிஃபா மருத்துவமனை தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் பலி

காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள அல்-அமல் மருத்துவமனைக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேலியப் படைகளால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் காயமடைந்த பாலஸ்தீனியர்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஆறாவது நாளாக தண்ணீர், உணவு, சுகாதார சேவைகள் இன்றி மருத்துவ வசதி முற்றுகைக்கு உட்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலிய இராணுவம் நேரடியாக மருத்துவமனையைத் தாக்கி வெளியேற்ற உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மற்றும் சுதந்திரமாகச் செல்லக்கூடிய நோயாளிகள் கான் யூனிஸின் மேற்கே அல்-மவாசி பகுதியை நோக்கி வெளியேற்றப்பட்டனர்.
(Visited 10 times, 1 visits today)