இலங்கை செய்தி

அக்குரேகொட இரட்டைக் கொலை: 2ஆவது துப்பாக்கிதாரி சிக்கியது எப்படி?

அக்குரேகொட இரட்டைக் கொலை Akuregoda double murder சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனறாகலை பகுதியில் பதுங்கி இருந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு சிக்கியுள்ளார்.

அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இரு துப்பாக்கிதாரிகளே சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பின்சென்றனர்.

இது தொடர்பான விசாரணை வேட்டையில் கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கிதாரியொருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.

இந்நிலையிலேயே இரண்டாவது துப்பாக்கதாரியும் நேற்றிரவு கைது மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு 29 வயதென தெரியவந்துள்ளது.

தெற்கில் இடம்பெற்ற சில துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இவர் தேடப்பட்டுவந்த நபரென தெரியவருகின்றது.

மொனறாகலையில் அவர் தங்கி இருந்த வீட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனறாகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலொன்றுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.

மேற்படி இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!