ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு விமானம் மூலம் உதவி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனங்களை வழங்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸின் மத்திய-வடக்கு கடற்கரைப் பகுதியில், பல நாட்களாக வெள்ளம் நகரத்தை தாக்கி, கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 10,000 சொத்துக்கள் சேதமடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
வெள்ளம் மெதுவாகக் குறையத் தொடங்கியதால் சுமார் 32,000 குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று மாநில அவசர சேவைகள் எக்ஸ் தளத்தில் வெளியிட்டன.
“நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் அவசரகால தீவனம், கால்நடை பராமரிப்பு, மேலாண்மை ஆலோசனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விலங்கிற்கு வான்வழி ஆதரவை வழங்கி வருகிறது” என்று மாநில விவசாய அமைச்சர் தாரா மோரியார்டி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
43 ஹெலிகாப்டர் மூலமும், பிற வழிகளில் பல முறையும் “தனிமைப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் சிக்கித் தவிக்கும் கால்நடைகளுக்கு அவசர தீவனத்தை” வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.