இலங்கை

விவசாயிகளின் கையில் இனி துப்பாக்கி ? விவசாய அமைச்சர் பணிப்புரை

பயிர்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க வெடிமருந்துகளுடன் கூடிய துப்பாக்கிகளை வழங்குமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், துப்பாக்கிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுக்குமாறு, விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வன விலங்குகளால் பயிர்களுக்கு பாரிய சேதம் ஏற்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது,

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!