செய்தி விளையாட்டு

விதி மீறல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 18ம் திகதி நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது, இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.

இந்நிலையில் இப்போட்டியின் போது ICC நடத்தை விதிகளை மீறியதாக ஆப்கனிஸ்தான் வீரர்கள் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

நூர் அஹ்மத், இன்னிங்ஸின் 16ஆவது ஓவரின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும், அதேபோல் கிரிக்கெட் உபகரணங்களுக்கு சேதம் விளைவித்ததற்காக முஜீப் உர் ரஹ்மான் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து இரு வீரர்களுக்கும் தலா ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!