இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் 03 நாள் விவாதம் நடத்த நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 24 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை குற்றவியல் நடைமுறை (திருத்தம்) சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) மற்றும் விஷ பொருட்கள், ஒளடதம் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள கட்டளைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின் படி முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!