இலங்கை செய்தி

கொழும்பில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பெண்

நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் களனி, பெத்தியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெத்தியகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் 820 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், டிஜிட்டல் தராசு மற்றும் 02 இலட்சம் ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!