இலங்கை செய்தி

அரசாங்கம் வழங்கிய அரிசியை தர மறுத்த கிராம அலுவலர் மீது பெண் தாக்குதல்

அரசாங்கம் வழங்கிய அரிசியை வழங்க மறுத்த பெண் ஒருவரால் தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணப்பிட்டி தெற்கு கிராம சேவையாளர் களப் பொறுப்பதிகாரியே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியை சந்தேகநபர் இந்த நாட்களில் பெற்றுக் கொள்ளவில்லை எனவும், இருவருக்குமிடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான கிராம உத்தியோகத்தர் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வஸ்கடுவ பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை