இலங்கை

லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான வேன்!

ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துல வால்ட்ரம்வத்தைக்கு அருகில் நேற்று (25.08) மாலை 05 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வேனின் சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன், திக் ஓயா நகரில் உள்ள கேரேஜ் ஒன்றில் வேன் பழுது நீக்கப்பட்டு மீண்டும் லிந்துலை நோக்கி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்