ஆப்பிரிக்கா

காங்கோவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ட்ரக் : 18 பேர் பலி!

தென்மேற்கு காங்கோவில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற டிரக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

காங்கோ மத்திய மாவட்டத்தில் உள்ள கசங்குலு பிரதேசத்தில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் சரக்குகள் நிரப்பப்பட்டு பல பயணிகளை ஏற்றிச் சென்ற டிரக் பள்ளத்தாக்கில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் கசங்குலு பொது மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிதமிஞ்சிய வேகம் விபத்திற்கான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!