இந்தியா

ஓடும் ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்… வைரலாகும் வீடியோ!

ரயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், கழிப்பறைக்குச் செல்வதற்காக திடீரென ஸ்பைடர் மேன் போல மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் அதிகம் விரும்புவது ரயிலைத் தான். காரணம் குறைந்த செலவில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும் என்ற காரணம் தான். இதனால், இந்தியாவில் தினமும் சராசரியாக 1.85 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே தற்போது தினமும் 14,300 ரயில்களை இயக்குகிறது. ஆனாலும், ரயில்களில் கூட்டம் குறைவதில்லை.

இருக்கைகள் நிரம்பினாலும், அதை விட எண்ணிக்கையில் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், கழிப்பறைக்குச் செல்வது மிக சவாலான காரியம். அன்றாடம் எண்ணற்ற பயணிகள் இந்த பிரச்சினையில் தவிக்கின்றனர்.

Western Railway to operate five pairs of Festival Special train for passenger's convenience - Check routes, timetable and stoppage points - Railways News | The Financial Express

இந்த நிலையில், ரயில் பயணி ஒருவர், கழிப்பறை செல்வதற்காக சிலந்தி போல, ரயில் பெட்டியின் மேல் பகுதியில் ஊர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நெரிசல் மிகுந்த ரயிலில் கழிவறைக்குச் செல்லும் அவரது வைரல் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த காட்சியை இன்ஸ்டாகிராம் பயனர் அபினவ் லமேஷ் படம் பிடித்துள்ளார். பயணிகளின் தலைக்கு மேலே உள்ள குறுகிய இடைவெளியில், அந்த பயணி வேகமாகவும் கவனமாகவும் நகர்வதையும் வீடியோவில் காணலாம்.

அவரது அசைவுகள் மற்ற பயணிகளுக்கு ஸ்பைடர் மேனின் அசைவுகளை நினைவூட்டியது. இந்த காட்சி சிலருக்கு நகைச்சுவையை ஏற்படுத்தினாலும், ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களில் இதுவும் ஒன்று என்பது மட்டும் மறக்க முடியாத உண்மை.

https://www.instagram.com/reel/C5LyunQNwtp/?utm_source=ig_web_copy_link

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content