இலங்கை

இலங்கை அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்க திட்டம்

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.

“அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் வழங்கிய 5,000 ரூபாய் உதவித்தொகை, ஏப்ரலில் வழங்கப்படும் மிகுதி 5,000 ரூபாய் போதாது என்று சொல்கிறோம்.குறைந்தபட்சம் 20,000 ரூபாய் உதவித்தொகை கேட்டு உழைக்கும் மக்கள் போராடினார்கள்.

அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றுக்கூடவுள்ளது. 29ஆம் திகதி கொழும்பில் நியாயமான சம்பள உயர்வு அல்லது கொடுப்பனவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஹோட்டல் தொழிலை பராமரிப்பது சிரமமாக உள்ளதாக ஹோட்டல் பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது.

அதன் தேசிய அமைப்பாளர் ஜயதிலக்க ரணசிங்க, தமது கைத்தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content