இலங்கை செய்தி

காசு இல்லாமல் ஒரு கோடிக்கு மேல் காசோலை கொடுத்த நபர்

செவனகல பிரதேசத்தில் வசிக்கும் அரிசி வியாபாரி ஒருவரிடம் இருந்து ஒரு கோடியே எண்பத்து மூன்று இலட்சத்து பதின்மூன்றாயிரம் ரூபா பெறுமதியான அரிசிக்காக வழங்கப்பட்ட 8 காசோலைகளை மதிப்பிழக்கச் செய்த சம்பவம் தொடர்பில் மொனராகலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளார்.

பண்டாரவளை, அம்பதென்ன உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரால் பல சந்தர்ப்பங்களில் பெற்ற அரிசிக்காக செவனகல அரிசி ஆலை உரிமையாளருக்கு எட்டு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

வங்கியில் பணம் இல்லாததால் காசோலை பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், அரிசி ஆலை உரிமையாளர் பல தடவைகள் உரிய பணத்தை கேட்டதால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை