ஆசியா

கிழக்கு எல்லை பகுதி ஊடாக தென்கொரியாவுக்குத் தப்பி ஓடிய வடகொரிய ராணுவ வீரர்

வடகொரிய ராணுவ வீரர் ஒருவர் ஆகஸ்ட் 20ஆம் திகதியன்று எல்லையைக் கடந்து தென்கொரியாவுக்குத் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியத் தீபகற்பத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில், ராணுவப் பாதுகாப்பு அதிகம் உள்ள இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தென்கொரிய ராணுவம் கூறியது.

வடகொரியாவிலிருந்து தென்கொரியாவின் கோசியோங் பகுதிக்கு அந்த வடகொரிய ராணுவ வீரர் நுழைந்ததாகவும் அவரைத் தென்கொரிய ராணுவ வீரர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் எல்லையைக் கடந்ததற்கான நோக்கத்தைத் தெரிந்துகொள்ள அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த ராணுவ வீரர் எல்லையைக் கடப்பதற்கு முன்பாகவே அவரது நடமாட்டத்தை தென்கொரிய ராணுவ வீரர்கள் கண்காணித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தென்கொரியாவுக்குத் தப்பி ஓடிய வடகொரிய ராணுவ வீரர் ஸ்டாஃப் சார்ஜன்ட் பதவி வகிப்பவர் என்று அறியப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!