ஐரோப்பா

ஜேர்மன் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்!

ஜேர்மன் நகரமொன்றில், பள்ளி ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு குவிந்தனர்.

நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7.15 மணியளவில், ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கருகிலுள்ள Brandenburg என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்த நிலையில், அவரிடம் கத்தி ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் இருந்ததைக் கவனித்தவர்கள் பொலிஸாருக்கு தகவலளித்தனர். உடனடியாக பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பொலிஸார் அவரை சூழ்ந்துகொண்டு மடக்கிப் பிடித்த நிலையில், அவரிடமிருந்தது alarm gun என்னும் எச்சரிக்கை கொடுக்கும் துப்பாக்கி என தெரியவந்தது.

அந்த 22 வயது நபரைக் கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஒருவருக்கும், கைது செய்யப்பட்டவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்தது பள்ளி துவங்கும் நேரத்திற்கு முன் என்பதால், பள்ளியில் மாணவ மாணவிகள் யாரும் இல்லை என்று கூறியுள்ள பொலிஸார், சில ஆசிரியர்கள், சில அலுவலர்கள் மற்றும் தோட்டத்தில் பணியாற்றும் சிலர் மட்டுமே பள்ளி வளாகத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் எதற்காக ஆயுதங்களுடன் பள்ளிக்குள் நுழைந்தார் என்பது தெரியவரவில்லை.

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!