இலங்கை

திருகோணமலையில் சில்லறை கடை உரிமையாளருக்கு மர்ம நபரால் நேர்ந்த கதி

கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரக்கஹவெவ பகுதியில் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (07) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் சில்லறை கடை ஒன்றினை நடாத்தி வரும் 62 வயதுடைய ஆர். சந்திரதாசவின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சந்திரதாச, தற்போது திருகோணமலை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!