ஐரோப்பா

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; 6 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் காயம்

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 80 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தின் முதல் தளத்தில் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.முதல் தளத்தில் பற்றிய தீ மற்ற தளங்களை சேதப்படுத்துவதற்கு முன்னதாக முழுவதும் அணைக்கப்பட்டது, இருப்பினும் கட்டிடம் முழுவதும் நச்சு வாயுக்கள் பரவியது.

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 4 பேர் நச்சுப்புகை தாக்கி உயிரிழந்து இருப்பதாக மிலன் நகர மேயர் கியூசெப் சாலா தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இந்த கோர சம்பவம் பெரும்பாலும் எதிர்பாராத விபத்து காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் லுகா காரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சக்கர நாற்காலி இருந்தவர்கள் உட்பட 80 பேரை பத்திரமாக மீட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 80 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிகமான கரும்புகை காரணமாக மீட்பு நடவடிக்கை மிகவும் சிரமமாக இருந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content