இந்தியா

இந்தியாவின் மணிப்பூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் செய்தியாளர் ஒருவருக்கு காயம்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் செய்தியாளர் ஒருவர் காயமுற்றார்.

அந்தக் காணொளிச் செய்தியாளரின் (video journalist) இடது தொடையில் தோட்டாக் காயங்கள் ஏற்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள தாம்னொக்பி கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்தச் செய்தியாளர் காயமுற்றார் என்று காவல்துறை தெரிவித்தது.

தாம்னொக்பி, சனசபி பகுதிகளில் நிகழ்ந்துள்ள இந்த ஆக அண்மைய தாக்குதலுக்கு எதிராக மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காயமுற்ற செய்தியாளர், இம்பேக்ட் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒளிவழிக்கு வேலை செய்யும் எல். கபிசந்திரா எனும் ஆடவர் நபர். காயமடைந்தவுடன் அவர் இம்பாலில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார்.

தோட்டா அவரின் இடது தொடையைத் துளைத்ததையும் அதன் காரணமாக அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதையும் அந்த மருத்துவமனை உறுதிப்படுத்தியது என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

(Visited 40 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே