இந்தியா செய்தி

பீடி கொடுக்க மறுத்த நபரை கத்தியால் குத்திய கஞ்சா போதையில் இருந்த 16 வயது சிறுவன்

கிழக்கு டெல்லியின் பாண்டவ்(Pandav) நகரில், பீடி கொடுக்க மறுத்த நபரை கத்தியால் குத்தியதாக கஞ்சா போதையில் இருந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொய்டா(Noida) சாலையில் உள்ள புதர்களுக்கு அருகில் நாய்கள் கூட்டமாக இருப்பதை அதிகாரிகள் கவனித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த இடத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ​​வயிறு மற்றும் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் மயக்கமடைந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா சஹானி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் லால் பகதூர் சாஸ்திரி(Lal Bahadur Shastri) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரத்தக் கறை படிந்த கத்தி மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுவன் 8ம் வகுப்பு படிப்பை பாதியில் இடைநிறுத்தியவர் என்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளவர் என்றும் தெரியவந்தது.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!