ஐரோப்பா

ஜேர்மனுக்கான எரிவாயு குழாய் உடைக்கப்பட்ட விவகாரம்: விசாரணையிலிருந்து பின்வாங்கிய சுவீடன்

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய் உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையிலிருந்து சுவீடன் திடீரென பின்வாங்கியுள்ளது.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு, இத்திட்டத்தின் கீழ் ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. அதன் பின்னணியில் சதிவேலை இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பல நாடுகள் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், சுவீடன் நாட்டு அதிகாரிகள், திடீரென விசாரணையை நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

16 மாதங்களாக சுவீடன் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், எதனால் அவர்கள் திடீரென பின்வாங்கியுள்ளார்கள் என்பது தெரியாத நிலையில், தங்களுக்கு அந்த வழக்கில் சட்டப்படி அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

சுவீடன் மக்களோ, அல்லது சுவீடன் நாடோ அந்த விடயத்தால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாத நிலையில், சட்ட ரீதியாக அந்த வழக்கை விசாரிக்க தங்களுக்கு அதிகாரமில்லை என்றும், அதனால் தாங்கள் அந்த வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர உள்ளதாகவும் சுவீடன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்