இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவை வழங்க வேண்டும்

எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அதிக வெற்றியடையாத போதிலும், குறிப்பிட்ட அளவிலான வெற்றியை நோக்கி அவர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக வருவதற்கு எந்தத் தகுதியிழப்பும் தாம் காணவில்லை என திஸ்ஸகுட்டியராச்சி சுட்டிக்காட்டுகிறார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் யார், ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் திஸ்ஸகுட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!