மத்திய கிழக்கு

ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் இரண்டாவது முறையாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், காஸாவில் மீண்டும் ராணுவ தாக்குதலை நேற்று காலை முதல் தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஹமாஸ் படையினர் போர்நிறுத்தத்தை மீறி விட்டதாகவும், போர் நிறுத்தத்தை மதிக்காமல் 2 ராக்கெட் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் பிடியிலிருந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் தன்வசம் சிறையில் இருந்த பாலஸ்தீனர்களைப் பதிலுக்கு விடுதலை செய்துள்ளது.

இந்த நிலையில் ஹமாஸ் படையினர் பிடியில் இன்னும் 137 பிணைக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவியை மேற்கோள் காட்டி, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் மொத்தமாக இதுவரை 110 பேர் வீடு திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது. ஹமாஸ் படையினரிடம் உள்ள பிணைக்கைதிகளில் 115 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள், 3 குழந்தைகள் உள்ளனர், அதில் 10 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 137 பிணைக் கைதிகளில் 126 பேர் இஸ்ரேலியர்கள் என்றும், 11 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிணைக் கைதிகள் இனி எப்போது மீட்கப்படுவார்கள்? எப்படி மீட்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவர்களின் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.